கடல் அட்டைகளைப் பிடித்த மீனவர்கள் ஐவர் கைது..!!
Read Time:1 Minute, 7 Second
அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக கடல் அட்டைகளைப் பிடித்த மீனவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் கீழ் மண்டைதீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் பள்ளிக்குடா கடற்பரப்பில் வைத்து கைதுசெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்து.
அத்துடன் குறித்த மீனவர்களிடம் இருந்த 142 கடல் அட்டைகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்த மீனவர்களும்,அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் படகுகளையும் பூநகரி கடற்படையினரின் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating