நாக்பூரில் இரு சிறுவர்கள் உள்பட 3 சகோதரர்கள் 13 வயது சிறுமியை கற்பழித்த கொடூரம்…!!
மராட்டிய மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை இரு சிறுவர்கள் உள்பட 3 சகோதரர்கள் கூட்டுசேர்ந்து கொடூரமான முறையில் கற்பழித்த சம்பவம் வெளியாகியுள்ளது.
மராட்டிய மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கணேஷ்பேட் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 13 வயது இளம்பெண் நேற்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் அந்த சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அவர்களிடமிருந்து தப்பித்து, வெளியே ஓட முயன்ற சிறுமியை மடக்கிப் பிடித்த மூவரும் வீட்டின் கதவை சாத்திவிட்டு, அந்தப் பெண்ணை மாறி,மாறி கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தனது பெற்றோர் வீடு திரும்பியதும் அருகாமையில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து தன்னை நாசப்படுத்தி விட்டதாக தெரிவித்த அந்த சிறுமி கதறி அழுதாள். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையில் அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 12 மற்றும் 17 வயதுடைய இரு சகோதரர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களின் அண்ணனான சஞ்சய்(21) என்பவனை தேடி வருகின்றனர்.
Average Rating