பாலத்தின் தூணில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி; ஒருவர் காயம்…!!
Read Time:1 Minute, 7 Second
திருகோணமலை கிண்ணியா, உப்பாற்று பாலத்தருகில் உள்ள தூண் ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் உயிரிழந்ததுடன் அவருடன் பயணித்த 17 வயதான இளைஞன் படுகாயங்களுக்குள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று பகல் 1.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating