நோயுற்ற 15 வயதான சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை பிரசவம்…!!
Read Time:1 Minute, 12 Second
15 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதனையடுத்து அவரின் தந்தை அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இதன்போது அச்சிறுமி குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ள சம்பவமொன்று நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி சில காலங்களுக்கு முன்னர் கண்டி பகுதியில் மிளகுத் தூள் பொதிசெய்யுமிடத்தில் வேலை செய்த சந்தர்ப்பத்தில் இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்துள்ளார்.
ஆனால், குறித்த இளைஞனின் தொலைபேசி எண்ணைத் தவிர வேறு எந்த விபரங்களையும் அறிந்திருக்கவில்லையென பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
Average Rating