மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய பாடசாலை வான் சாரதி..!!

Read Time:1 Minute, 47 Second

0071efe7181d1e3ab9fc019d3661e5ac15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய 38 வயதுடைய நபர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் சிலாபம் – கரவிட்டாகரய பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் பாடசாலை வேனின் சாரதி என்றும், அவரின் வானில் குறித்த மாணவி பாடசாலை சென்று வந்த போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த விடயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து மாணவியை குறித்த நபரின் வானில் அனுப்புவதை நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த 24ம் திகதி குறித்த மாணவியை சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிட்டு மாணவியின் பெற்றோர் மாதம்பே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், மாணவியை சிலாபம் வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக அனுமதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-3)
Next post காதலியை கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன் ; இலங்கையில் கொடூர சம்பவம்…!!