ராஜஸ்தானில் கள்ளக்காதலனுடன் நிர்வாணமாக பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்ததாக 24 பேர் கைது…!!

Read Time:2 Minute, 41 Second

201606281035566744_24-held-for-stripping-tying-woman-paramour-to-tree-in_SECVPFராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் கசோட்டியா கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். அருகாமையில் உள்ள கோடி பிப்லி டேகான் கிராமத்தை சேர்ந்த லாலு ராம் என்பவருடன் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக அரும்பியதையடுத்து, அவருடன் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்த தொடங்கினார்.

இதையறிந்த முன்னாள் கணவன் பன்வர் லால் என்பவர் கடந்த 20-ம் தேதி அடியாட்கள் கும்பலுடன் கோடி பிப்லி டேகான் கிராமத்துக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் வசித்துவந்த லாலு ராமையும் அவரது துணைவியையும் அந்த கும்பல் பன்வர் லாலின் சொந்த ஊரான கசோட்டியா கிராமத்துக்கு இழுத்துச் சென்றது.

அங்குள்ள ஒரு மரத்தில் கள்ளக்காதலர்களை இருவரையும் நிர்வாணமாக கட்டிவைத்து, இரண்டு நாட்களாக அடித்து, உதைத்து, சித்ரவதை செய்துவந்த தகவல் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக படங்களுடன் காட்டுத்தீயாக பரவியது. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற தாயார், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுபேரையும் பன்வர் லாலின் உறவினர்கள் சிறைபிடித்து வைத்தனர்.

இதையடுத்து, உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட நிர்வாகம், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கிராமத் தலைவர் மற்றும் ஒரு போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்தது. பின்னர் நடந்த புலன் விசாரணையின் விளைவாக கடந்த வாரம் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 24 பேர் பிடிபட்டுள்ளதாகவும், தலைமறைவாக இருக்கும் மேலும் சிலரை தேடிவருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜேந்திர பிரசாத் கோயல் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவையில் வீடு புகுந்து வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை…!!
Next post காட்டாற்று வெள்ளத்தால் அடியோடு நிர்மூலமாகும் அடுக்குமாடி வீட்டின் அவலக் காட்சி…!! வீடியோ