மரத்தில் மோதி பஸ் விபத்து : 28 பேர் காயம்…!!
Read Time:1 Minute, 3 Second
கலவுட – பதுளை பிரதான வீதியின் போகஸ்தென்ன, ஜங்குல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதியதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பஸ் சாரதி, நடத்துனர் உட்பட 26 பயணிகள் உள்ளடங்கியுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (28) பகல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலை மற்றும் கந்தகெதர அரசினர் வைத்திசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 20 பேரில் 7 பேரின் நிலமை
கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating