திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 ரவுடிகள் கைது…!!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கேள்விக் குறியாகி உள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இதற்கு கூலிப்படைகள் தான் காரணம் என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கூலிப்படை கலாச்சாரத்தை ஒடுக்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ரவுடிகள் மற்றும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடிகள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
Average Rating