பரிகாரம் தேடிச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – பிக்கு கைது…!!
கடுவெல பிரதேசத்தில் 13 வயது சிறுமியை துஸ்பிரயோப்படுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கருகில் குறித்த சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும், சில தினங்களாக குறித்த வீட்டின் மீது கல் எறி சம்பவம் இடம்பெற்றதை அடுத்து பிரதேசவாசிகள் அருகில் உள்ள விகாரையின் பிக்குவிடம் இதுதொடர்பில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த வீட்டிற்கு திருஸ்டி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பரிகார பூஜைகளை செய்ய வேண்டும் எனவும் பிக்கு குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த வீட்டிலிருந்த சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியவர, இந்த விகாரையின் பிக்குவும், அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களை இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating