“அண்ணன் இறந்தது போல் விளையாடுகின்றான் மாமி ஓடி வாருங்கள்”..!!

Read Time:1 Minute, 58 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)14 வயது சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் மினிபே வேரங்தொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த சேலையினால் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினிபேசங்க போதி மத்திய கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள போது, 4 வயதான சிறுவனின் சகோதரர் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பெற்றோர் குறிப்பிடப்பட்ட பிரதேசத்தில் உள்ள நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை சிறுவன் இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

மேலும், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த கோர சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சிறுவன் தனது மாமியிடம் “அண்ணன் பொய்க்கு இறந்தது போல் விளையாடுகின்றான் ஓடி வந்து பாருங்கள்” எனவும் கூறியுள்ளான்.

குறித்த சிறுவன் தூக்கில் தொங்கி உயிரிழப்பதற்கான காரணங்கள் இது வரையில் அறியப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரிகாரம் தேடிச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – பிக்கு கைது…!!
Next post சிறுமி மீது துப்பாக்கி பிரயோகம்:கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது…!!