சிறுமி மீது துப்பாக்கி பிரயோகம்:கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது…!!
கல்நேவ – வலஸ்வேவ பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நுழைந்து, 12 வயதுடைய சிறுமி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவம் நேற்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினத்திலே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்களிடம் இருந்து டி 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு உரிய 51 குண்டுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமி, கல்நேவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெலிவேரிய, தெல்கொடை, தெகடன மற்றும் வெலிசர பிரதேசத்தை சேர்ந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாகவும் இராணுவ உயர் அதிகாரி ஒருவரே கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டுள்ளார் என்றும் விசாரணைகளின் மூலம் அறியவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Average Rating