22 வயது யுவதியை காணவில்லை…!!

Read Time:1 Minute, 37 Second

MissingWoman-300x168கண்டி – களுகலதென்ன – தெருல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய தனது மகள் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது கடத்தலா இல்லையா, என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிரோஷா தில்ருக்‌ஷி என்ற 22 வயதுடைய குறித்த பெண் கடந்த திங்கட் கிழமையன்று கண்டியில் இடம்பெற்ற மேலதிக வகுப்பிற்கு சென்றுள்ளார்.

எனினும் , அன்றிலிருந்து அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என காணாமல் போனவரின் தாயார் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் , குறித்த பெண், அவர் மணமுடிக்கவுள்ள நபருக்கு தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்தாகவும், தன்னை இனந்தெரியாத சிலர் கடத்தி வந்து சிறைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரின் தொலைபேசி உரையாடலின் படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரா கலவரம்: முக்கிய குற்றவாளி மனைவியுடன் கைது…!!
Next post கருக்கலைப்பு மாத்திரைகளுடன் மூவர் கைது…!!