பொலிஸ் வைத்தியசாலையில் மருந்துகளை திருடியவர் கைது…!!
Read Time:1 Minute, 3 Second
நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்துகளை திருடிய நபரை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் அரச ஊழியர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த சந்தேகநபரால் திருடப்பட்ட மருந்துகளின் பெறுமதி 5 இலட்சம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த சந்தேகநபர் தான் திருடிய மருந்துதொகையினை அவருடைய முச்சக்கரவண்டியிலேயே கடத்திச் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating