கொழுத்திய பட்டாசில் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…!!

Read Time:1 Minute, 37 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)புல்மோட்டை – ஜின்னாநகர்ப் பகுதியில் பட்டாசு வெடித்ததில் கண்பகுதியில் காயமடைந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை, திருகோணமலை பொது வைத்தியசாலையில், நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் ஜின்னாநகர்ப் பகுதியைச் சேர்ந்த இத்ரீஸ் முகம்மது சப்ரி என்ற குழந்தையே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, அந்தக் குழந்தையின் 12 வயது அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்கள் பட்டாசு கொழுத்தி விளையாடிக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், காயங்களுக்குள்ளான குழந்தை, புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை தற்பொழுது கண் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை…!!
Next post ஆரையம்பதி மர ஆலையில் தீ…!!