திருட சென்ற வீட்டில் சமைத்து உண்டு சென்ற திருடன்…!!
திருடச் சென்ற வீட்டில் திருடன் சமைத்து உண்டுச் சென்ற சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் அரசு ஊழியர் ஒருவர் வீட்டிலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் அரசு ஊழியர். சம்பவத்தன்று தனது மகனை சந்திப்பதற்கு சென்னைக்கு சென்றுள்ளார். இவரது மனைவி வேலைக்கு சென்றுள்ளார்.
வேலை முடித்து விட்டு இரவு வீடு திரும்பிய போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது அலுமாரியிலிருந்த தங்க நகை மற்றும் 55 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை காணவில்லை.
மேலும் சமையலறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பாத்திரங்களில் சமைத்த சோறு இருந்துள்ளது, சமையல் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. இதுகுறித்து வாணியம்பாடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் யாருமில்லாததை அறிந்துக் கொண்ட திருடன், திருட சென்ற வீட்டில் சாவகாசமாக சமைத்து உண்டு சென்றுள்ளான் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating