திருட சென்ற வீட்டில் சமைத்து உண்டு சென்ற திருடன்…!!

Read Time:2 Minute, 5 Second

176861467176811-7099திருடச் சென்ற வீட்டில் திருடன் சமைத்து உண்டுச் சென்ற சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகு­தியில் அரசு ஊழியர் ஒருவர் வீட்­டி­லேயே இவ்­வாறு இடம்­பெற்­றுள்­ள­தாக அப்­ப­குதி பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆம்பூர் அருகே வெங்­கிளி கிரா­மத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் அரசு ஊழியர். சம்­ப­வத்­தன்று தனது மகனை சந்திப்பதற்கு சென்­னைக்கு சென்­றுள்ளார். இவ­ரது மனைவி வேலைக்கு சென்­றுள்ளார்.

வேலை முடித்து விட்டு இரவு வீடு திரும்­பிய போது பூட்­டப்­பட்­டி­ருந்த வீட்டின் கதவு உடைக்­கப்­பட்­டி­ருந்­தது.

உள்ளே சென்று பார்த்­த­போது அலு­மா­ரியிலிருந்த தங்க நகை மற்றும் 55 ஆயிரம் ரூபா பணம் என்­ப­வற்றை காண­வில்லை.

மேலும் சமையலறைக்கு சென்று பார்த்­த­போது அங்கு பாத்­தி­ரங்­களில் சமைத்த சோறு இருந்­துள்­ளது, சமையல் பொருட்கள் சிதறிக் கிடந்­துள்­ளன. இது­கு­றித்து வாணி­யம்­பாடி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

குறித்த முறைப்­பாட்­டின்­பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்­தி­யுள்­ளனர். அப்­போது வீட்டில் யாரு­மில்­லாததை அறிந்துக் கொண்ட திருடன், திருட சென்ற வீட்டில் சாவகாசமாக சமைத்து உண்டு சென்றுள்ளான் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரையம்பதி மர ஆலையில் தீ…!!
Next post ரஷ்ய கட்டடத்தின் மேற்பகுதியில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியை ஆளில்லா விமானம் படம்பிடித்தது…!!