13 வயது சிறுமியை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள்: கேரள கோர்ட்டு தீர்ப்பு…!!
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மது (வயது36). ஆட்டோ டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மது மீது மஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த மது அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் இதேபோல மேலும் 4 சிறுமிகளையும் கற்பழித்தது தெரிய வந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொடூர செயல் காரணமாக மது ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை மஞ்சேரி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் மதுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில் குழந்தைகளிடம் ஈவு இரக்கமற்ற முறையில் கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு இது போன்ற தண்டனைகள் வழங்குவதன் மூலம் தான் குற்றங்களை குறைக்க முடியும் என்று கூறி உள்ளார்.
Average Rating