முன்னாள் போராளி என்பதால் காதல் முறிவு : இளைஞன் நஞ்சருந்தி தற்கொலை..!!

Read Time:3 Minute, 34 Second

downloadயாழ்ப்­பாணம் – அச்­சு­வேலி பகு­தியில், முன்னாள் போரா­ளி­யென்­பதால் காதலில் ஏற்­பட்ட இடை­மு­றிவு கார­ண­மாக இளைஞன் ஒருவர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்­து­கொண்ட சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

இச் சம்­ப­வ­மா­னது நேற்­று­முன்­தினம் அச்­சு­வேலி வடக்கு பகு­தியில் இடம்­பெற்­றுள்­ள­துடன் அதே பகு­தியை சேர்ந்த விஜ­யனாத் (27 வயது) என்­ப­வரே தற்­கொலை செய்­து­கொண்­ட­வ­ராவர்.

இந்­நி­லையில் இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

குறித்த இளைஞன் ஒர் முன்னாள் போரா­ளி­யாவார். இவர் கடந்த எட்டு வரு­டங்­க­ளாக யுவ­தி­யொ­ரு­வரை காத­லித்து வந்­துள்ளார். இந்­நி­லையில் போரில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக இவ­ரது ஒரு கண் பார்வை பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து கடந்த இரு­வ­ரு­டங்­க­ளுக்கு முன்னர் இவர் காத­லித்து வந்த பெண்ணின் தந்தை இவ­ரது கண்­பார்வை குறை­பாட்­டையும் முன்னாள் போராளி என்­ப­தையும் காரணம் காட்டி இவர்­க­ளது காதலை தடுத்­தி­ருந்தார். அத்­துடன் கடந்த நான்கு மாதங்­க­ளுக்கு முன்னர் அவர் தனது மகளுக்கு வேறு திரு­மணம் ஒன்­றையும் செய்­து­வைத்­துள்ளார்.

இதனால் மன­மு­டைந்த குறித்த இளைஞன் மது­வுக்கும் அடி­மை­யா­கி­யி­ருந்­துள்ளார். இந்­நி­லையில் நேற்­று­முன்­தினம் வீடு வந்த இவர் இரவு 10 ம­ணி­ய­ளவில் வெளியில் சென்று விட்டு வரு­வ­தாக கூறி சென்­றி­ருந்த நிலையில் நீண்ட நேர­மா­கியும் வீடு திரும்­பா­ததால் வீட்டார் இவரை தேடிச்­சென்­றுள்­ளனர்.

இதன்­போது இவர் வீட்­டிற்கு அண்­மையில் இருந்த காணி­யொன்­றுக்குள் நஞ்­ச­ருந்­திய நிலையில் வீழ்ந்து கிடந்­துள்ளார். இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக இளை­ஞனை அச்­சு­வேலி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தி­ருந்த போதும் குறித்த இளைஞன் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­வரும் முன்­னரே உயி­ரி­ழந்து விட்­ட­தாக மருத்­து­வ­மனை தக­வல்கள் தெரி­வித்­தன.

மேலும் பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­காக சடலம் யாழ் போதனா வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இது தொடர்­பான மர­ண­வி­சா­ர­ணையை யாழ். போதனா வைத்­தி­ய சா­லையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார். அத்துடன் குறித்த இளைஞன் பெற்றோரை இழந்திருந்த நிலையில் உறவினர்களுடனேயே வசித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்குத் தடை..!!
Next post தொலைக்காட்சி நிருபர் மீது தகாத வார்த்தை பிரயோகித்த பெண்…!!