மாணவியிடம் கேலி–கிண்டல் செய்து தந்தைக்கு கொலை மிரட்டல்: ஐ.டி.ஐ. மாணவர் கைது…!!
Read Time:1 Minute, 11 Second
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வாழவந்தாள் புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.
பள்ளிக்கு சென்றுவரும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் ரமேஷ், தன்னை காதலிக்குமாறும், கேலி–கிண்டல் செய்து வந்துள்ளார். மாணவி பலமுறை எச்சரித்தும் ரமேஷ் திருந்தவில்லை. மகளை பின் தொடர்ந்து தொந்தரவு செய்யக்கூடாது என்று ராமரும் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராமரிடம் பிரச்சினை செய்த ரமேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து ஐ.டி.ஐ. மாணவர் ரமேசை கைது செய்தார்.
Average Rating