போதையில் கார் ஓட்டி 9 வயது சிறுமியை மூளைசாவுக்கு காரணமான கல்லூரி மாணவர்…!!

Read Time:2 Minute, 32 Second

201607041832023532_Drunk-Hyderabad-Students-Leave-9-Year-Old-Girl-BrainDead_SECVPFகடந்த வெள்ளிக்கிழமை அன்று 9 வயது சிறுமி ரம்யா தன்னுடைய புதிய பள்ளிக்கு தந்தையுடன் சென்று உள்ளார். மாலையில் ரம்யாவை அவரது தாயார், தாத்தா மற்றும் அவரது 2 மாமா பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளனர். முதல்நாள் பள்ளி முடிந்ததும், அந்த அனுபவங்களை அவர்களிடம் சொல்லிய வண்ணம் காரில் வீடு நோக்கி சென்ற போது பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சென்றபோது 6 பேர் வந்த ஐ10 கார், அவர்களது கார் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். ரம்யாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரம்யா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ரம்யாவிற்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரனையில் ஐ10 காரில் வந்தவர்கள் குடித்து இருந்தார்கள் என்பது தெரியவந்து.

திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் மது அருந்திவிட்டு 6 பேரும் காரில் வந்துள்ளனர். அதில் ஒரு என்ஜினீயரியங் மாணவன் காரை ஓட்டியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் தங்களது காவலில் வைத்து உள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரம்யாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழக்க நேரிடலாம் என்றும் கூறிவுள்ளனர்.

ரம்யாவின் மீது அதிக பாசம் கொண்டிருந்த அக்குடும்பத்தினர் கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுடைய துயரத்திற்கு எந்த ஒரு ஆறுதலும் கிடையாது.

மது அருந்துவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் போதையில் வாகனம் ஓட்டி அப்பாவி உயிர்களை பறிப்பது, திட்டமிட்டு ஒருவரை கொலை செய்வதற்கு ஒப்பானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை மாயமான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம்…!!
Next post பிரேஸில் முன்னாள் அழகுராணி சடலமாக மீட்பு…!!