அமைச்சர்களை சிறைக்குள் அடைத்தார் மைத்திரி..!!
Read Time:1 Minute, 16 Second
புதிதாகத் திறந்துவைத்துள்ள மாத்தறை மதுவரித் திணைக்களக் கண்காணிப்பாளர் பணியகத்தில் சந்தேக நபர்களை அடைத்துவைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களை அடைத்துவைத்துள்ளார்.
மாத்தறை மதுவரித் திணைக்களத்தை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்துவைத்தார். இதன் அடுத்த நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் தென்மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரை அடைத்துவைத்துள்ளார்.
ஒவ்வொருவராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் கூண்டுக்குள் அடைக்கப்பட்டபோதிலும் சுஜீவ சேனசிங்க மாத்திரம் அவரது பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டார்.
Average Rating