வேறொருவரை திருமணம் செய்ததால் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது…!!

Read Time:3 Minute, 49 Second

201607050758481124_Youth-arrest-cut-with-girlfriend-neck-near-tharamangalam_SECVPFசேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24), தொழிலாளி. இவரது மனைவி சஞ்சினி (19). இவர்களுக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மணிகண்டன் வீட்டில் இருந்து சஞ்சினியின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் கையில் கத்தியுடன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சஞ்சினி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

உடனே அவர்கள், சஞ்சினியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சஞ்சினியின் கழுத்தை அறுத்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் பிடித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (27) என்பதும், ஆசிரியர் பயிற்சி படித்து வேலை கிடைக்காததால் பேரணாம்பட்டில் உள்ள செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சந்திரசேகரனிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சந்திரசேகரன் வேலை செய்த தொழிற்சாலையில் சஞ்சினியின் அண்ணி சித்ரா வேலை செய்து வந்தார். அவரை பார்க்க அடிக்கடி தொழிற்சாலைக்கு வந்து சென்றபோது சஞ்சினிக்கும், சந்திரசேகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மலர்ந்தது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் வேறொருவரை சஞ்சினி திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் அகதி முகாமுக்கு வந்து, ஏன் என்னை ஏமாற்றிவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டாய்? என்று சஞ்சினியிடம் கேட்டார். அதற்கு அவர், வீட்டுச்சூழ்நிலையால் திருமணம் செய்துகொண்டேன். என்னை மறந்துவிடு, இனி போன் செய்தோ, நேரில் வந்தோ தொந்தரவு செய்யாதே என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன், எனக்கு கிடைக்காதவள், இன்னொருவருடன் வாழக் கூடாது என கத்தியால் சஞ்சினியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்திரமேரூர் அருகே லாரி மோதி, கணவன்-மனைவி பலி..!!
Next post உதவி செய்ய போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!… சிரிக்க வைக்கும் அருமையான காட்சி..!! வீடியோ