தாய்ப்பால் அருந்திய பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலி..!!
Read Time:1 Minute, 6 Second
பொகவந்தலாவை மோறா தோட்டத்தில் பிறந்து பதின்மூன்று நாட்களேயான பெண் குழந்தை ஒன்று தாய்ப்பால் அருந்திய நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதிகாலையில் குழந்தை அழுதுகொண்டிருந்ததால், குழந்தைக்கு தாய் பாலூட்டி தூங்க வைத்துள்ளார்.
பின்னர் குழந்தை காலை ஆறு மணிவரை எவ்வித அசைவுகளும் இல்லாதிருந்தமையினால் பெற்றோர் உடனடியாக பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள், தாய்ப்பால் தொண்டையில் இறுகியதால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
Average Rating