விபத்தின் பின் பாதசாரியின் சடலம் காரில் தொங்கிய நிலையில் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் தொடர்ந்து பயணித்த யுவதி…!!
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர், மதுபோதையில் வாகனம் செலுத்தி பாதசாரி ஒருவரை மோதி கொன்றபின், அந் நபரின் சடலம் காரின் முன்புறத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் அக்காரை செலுத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
29 வயதான ஸ்டேஸி சான்செஸ் எனும் இந்த யுவதி, அண்மையில் ஒருநாள் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் தனது வீடு நோக்கி வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தபோது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் 69 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். அந் நபரின் சடலம் முன்புறக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு முன்புற பயணி ஆசனத்துக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருந்தது.
ஆனால், இதை கவனிக்காதவராக தொடர்ந்தும் வாகனத்தை செலுத்தி தனது வீட்டை அடைந்த ஸ்டேஸி சான்செஸ், காரிலிருந்து இறங்கிச் சென்றார்.
பின்னர் பொலிஸார் ஸ்டேஸி சான்செஸை கைது செய்தனர். மது போதையில் வாகனம் செலுத்தியமை, விபத்தின் பின்னர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச்சென்றமை, கைமோசக்கொலை முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
Average Rating