விபத்தின் பின் பாதசாரியின் சடலம் காரில் தொங்கிய நிலையில் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் தொடர்ந்து பயணித்த யுவதி…!!

Read Time:1 Minute, 55 Second

17794carஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், மது­போ­தையில் வாகனம் செலுத்தி பாத­சாரி ஒரு­வரை மோதி கொன்­றபின், அந் ­ந­பரின் சடலம் காரின் முன்­பு­றத்தில் தொங்­கிக்­கொண்­டி­ருந்த நிலையில் சுமார் ஒன்­றரை கிலோ­மீற்றர் தூரம் அக்­காரை செலுத்திச் சென்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

29 வய­தான ஸ்டேஸி சான்செஸ் எனும் இந்த யுவதி, அண்­மையில் ஒருநாள் நண்­பர்­க­ளுடன் மது அருந்­தி­விட்டு இரவு நேரத்தில் தனது வீடு நோக்கி வாக­னத்தை செலுத்­திக்­கொண்­டி­ருந்­த­போது இவ்­ வி­பத்து இடம்­பெற்­றுள்­ளது.

கலி­போர்­னியா மாநி­லத்தில் இடம்­பெற்ற இந்த விபத்தில் 69 வய­தான நபர் ஒருவர் உயி­ரி­ழந்தார். அந் ­ந­பரின் சடலம் முன்­புறக் கண்­ணா­டியை உடைத்துக்­கொண்டு முன்­புற பயணி ஆச­னத்­துக்கு முன்னால் தொங்­கிக்­கொண்­டி­ருந்­தது.

ஆனால், இதை கவ­னிக்­கா­த­வ­ராக தொடர்ந்தும் வாக­னத்தை செலுத்தி தனது வீட்டை அடைந்த ஸ்டேஸி சான்செஸ், காரி­லி­ருந்து இறங்கிச் சென்றார்.

பின்னர் பொலிஸார் ஸ்டேஸி சான்­செஸை கைது செய்­தனர். மது போதையில் வாகனம் செலுத்­தி­யமை, விபத்தின் பின்னர் வாக­னத்தை நிறுத்­தாமல் தப்­பிச்­சென்­றமை, கைமோ­சக்­கொலை முத­லான குற்­றச்­சாட்­டுகள் அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி, ஏமன் நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
Next post ஈபிள் கோபுரத்தை ஓர் இரவு மட்டும் வீடாக பயன்படுத்திய குடும்பம்…!!