65 வயதானவர் விஷ ஊசி ஏற்றிக் கொலை; உறவினர் உட்பட இருவர் கண்டியில் கைது…!!
அறுபத்தைந்து வயதுடைய நபர் ஒருவரை விஷ ஊசி மருந்தை ஏற்றி கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் கொலையுண்டவரின் உறவினராவார். கண்டி, தெய்யனவெலயைச் சேர்ந்த மொஹமட் அரூஸ் (65) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்த வயோதிபர் கடந்த சனிக்கிழமை திடீரென சுகவீனமடையவே கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு இவர் மரணமடைந்ததையடுத்து, சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம். சுப்பிரமணியம் பிரேத பரிசோதனை நடத்தி ஊசி மூலம் உடலுக்கு விஷம் ஏற்றப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்ததையடுத்து இறந்தவரின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவரின் உடல் உறுப்புக்கள் இரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கை கிடைத்த பின்னரே பிரேத பரிசோதனை அறிக்கை கையளிக்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Average Rating