நீண்டநாள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தந்தையும் மகளும் கைது…!!
Read Time:1 Minute, 23 Second
ஹற்றன் பிரதேத்தில் கஞ்சாவை பொதி செய்து விற்றுவந்த தந்தையும், மகளும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹற்றன், குடாகம பிரதேச வீடொன்றில் இவர்கள் கஞ்சா விற்பனையில் மிக நீண்டநாட்களாக ஈடுபட்டு வந்துள்ளதாகவும், குறித்த தந்தை பல தடவைககள் கஞ்சா விற்பனை குற்றச்சாட்டின் கீழ் ஹற்றன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் என்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்யப்பட்ட வேளை இவர்களிடம் 42 மில்லிகிராம் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர்களை இன்றைய தினம் ஹற்றன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating