அமெரிக்காவில் பயிற்சியின் போது மகனை தவறுதலாக சுட்டு கொன்ற தந்தை…!!
Read Time:1 Minute, 10 Second
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் வில்லியம் புரும்பி(54), இவர் சரசோடா என்ற இடத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகன் ஸ்டீபன் புரும்பியும் உடன் இருந்தார். அப்போது துப்பாக்கி குண்டு தவறி திசை மாறி சென்று அருகில் இருந்த சுவரில்பட்டு விழுந்தது.
அதன்பின்னர் மீண்டும் அவர் துப்பாக்கியால் சுட்டார். அக்குண்டு பின்புறம் நின்று கொண்டிருந்த அவரது மகன் ஸ்டீபன் உடலில் பாய்ந்தது.
இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவில் பல சம்பவங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இது போன்று கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 13,286 பேர் உயிரிழந்துள்ளனர்.
Average Rating