பாலக்காடு அருகே தாயை வெட்டிக்கொன்ற மகன் கைது…!!

Read Time:1 Minute, 38 Second

201607061247484579_Mother-killed-by-son-arrest-near-palakkad_SECVPFகேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தென்கரையை சேர்ந்தவர் குஞ்சயாகுட்டி. இவரது மனைவி ஆயிஷா உம்மர் (வயது 68). இவர் நேற்று மாலை வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவரது மகன் அப்துட்டி (50) அங்கு வந்தார். திடீரென துப்துட்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாயை வெட்டினார். தலை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த ஆயிஷா உம்மர் ரத்தவெள்ளத்தில் மயங்கினார்.

தாயை வெட்டிய அப்துட்டி அங்கிருந்த தப்பினார். அந்த பக்கம் நீண்ட நேரம் யாரும் வரவில்லை. இதனால் மூதாட்டிக்கு ரத்தபோக்கு அதிகமானது.

பின்னர் அந்த பகுதிக்கு வந்த ஒருவர் இதைபார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மன்னார்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சிஜி சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாயை வெட்டிக்கொன்ற மகனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல சாமியார் 3 பெண்களுடன் கடலில் உல்லாசம்! அதிர்ச்சி வீடியோ..!!
Next post முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது…!!