21 நாள் திருமணவாழ்க்கையின் பின் மர்மமான முறையில் யுவதி மரணம்…!!
நுவரெலியா ராகல பகுதியில் வசிக்கும் தமிழ் யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தபொல, கொணபிட்டியவத்தவை சேர்ந்த செல்வராசா பிரியதர்சனி (28) வயதுடையவர் எனவும், 21 நாட்கள் முன்னரே இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த யுவதியின் கணவர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த பொழுது தனது மனைவி இறந்து கிடப்பதை கண்டதை அடுத்து பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த யுவதி தனது நண்பி ஒருவருக்கு தொலைபேசியில் அறிவித்த பிற்பாடே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.