டெங்கு நோயை காட்டி அரசாங்கம் பணம் சம்பாதிக்கின்றது…!!
டெங்கு ஒழிப்பை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, டெங்கு நோயை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால், பெண் தாதி ஒருவரின் உயிர் பறிபோயுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது.
இதனை தவிர வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. டெங்கு நோய் பரவலின் பாரதூரமான நிலைமையை தீர்மானிக்க இதுவே போதுமானது என சங்கத்தின் தலைவரான தாதி அதிகாரி காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச புள்ளிவிபரங்களின் படி இந்த வருடம் டெங்கு நோய் ஏற்பட்டவர்களின் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நோயாளர்களின் எண்ணிக்கையும் 20 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம் டெங்கு நுளம்பு பரவலுக்கு காரணமாக இருந்ததாக கூறி அபராதத்திற்கு மேல் அபராதத்தை விதித்து வருகிறது எனவும் குமாரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
Average Rating