60 போலி அமெரிக்க டொலர்களுடன் மூன்று பேர் கைது…!!

Read Time:1 Minute, 33 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)60 போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த மூன்று பேரை முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் லால் பத்மலாலின் நெறிப்படுத்தலில், மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்த டொலர்களை முழுமையாக இலங்கையில் விற்பனை செய்திருந்தால், 8 லட்சத்து 4 ஆயிரம் ரூபாவை இவர்கள் மோசடியாக பெற்றுக்கொண்டிருப்பார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ரூபாவை கொடுத்து டொலர்களை கொள்வனவு செய்பவரை பொலிஸார் தந்திரமான முறையில் ஒருவரை அனுப்பி வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்க்கையில் வேகம் வேண்டும்…. இல்லையென்றால் இதுதான் கதி…!! வீடியோ
Next post சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்…!!