கானாவில் ரம்ஜான் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல்: 9 பேர் உயிரிழப்பு…!!
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை பல்வேறு நாடுகளில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ரமலான் மாத நிறைவைக் குறிக்கும் வகையில், கானாவின் குமாசி நகரில் நேற்று இரவு சிறப்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் அதிகரித்தபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து மருத்துமவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்தவர்களிடையே அச்சம் ஏற்பட்டு வெளியே செல்ல முற்பட்டதால் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தின் நடுவே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating