ராயப்பேட்டையில் பள்ளி சிறுமிகளிடம் செக்ஸ் குறும்பு: முதியவர் கைது…!!

Read Time:1 Minute, 47 Second

201607081444013251_school-girl-students-harassment-elderly-man-arrest-in_SECVPFசென்னை எம்.ஜி.ஆர் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (66). இவர் ராயப்பேட்டை அய்யா தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்.

அப்போது அவர் அப்பகுதியில் உள்ள சிறுமிகளிடம் சகஜமாக பழகி வந்தார். வயதானவர் என்பதால் சிறுமிகளும் அவரிடம் ‘தாத்தா’ என அன்பாக பேசி வந்தனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள ஜெயக்குமார் நினைத்தார்.

வழக்கம்போல் நேற்றும் அங்கு சென்றார். அப்போது 6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகள் அவரிடம் பேசினர். இவர்கள் இருவரும் அக்காள்-தங்கை ஆவர்.

பள்ளிமுடிந்ததும் மாலையில் அவர்கள் வீடு திரும்பினர். பின்னர் இருவரையும் தனியாக அழைத்து சென்ற ஜெயக்குமார் அவர்களிடம் ‘செக்ஸ்’ குறும்பில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் சிறுமிகளின் கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை பிடித்த பொதுமக்கள் ‘தர்ம அடி’ கொடுத்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

அதை தொடர்ந்து அவரை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கைது செய்தார். அவர்மீது குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அப்பாவியை துடிதுடிக்க சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீசாரின் அத்துமீறல்: அதிர்ச்சி வீடியோ…!!
Next post கள்ளக்காதலியின் குழந்தையை கொன்று புதைத்த தூத்துக்குடி டிரைவர் எங்கே?: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை…!!