நாமக்கல் அருகே பாசமாக வளர்த்த நாயை கணவர் காட்டில் விட்டதால் இளம்பெண் தீக்குளிப்பு…!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் பெருமாள். காய்கறி வியாபாரி. இவரது மனைவி சாந்தி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் சாந்தி செல்லப் பிராணியான உயர் ரக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்தார். அந்த நாய் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவர் குழந்தைகளை போல பராமரித்து வந்தார்.
இதற்கு பெருமாள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த நாய், குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் நாயும் அதன் குட்டிகளும் சத்தம் போட்டவாறே வீட்டில் கிடந்தது.
இதை பார்த்து கடும் ஆத்திரம் அடைந்த பெருமாள், அந்த நாய் மற்றும் அதன் குட்டிகளை ஒரு சாக்கில் பிடித்து போட்டு காட்டில் கொண்டு விட்டார்.
வெளியில் சென்றிருந்த சாந்தி வீட்டுக்கு வந்த போது நாய் மற்றும் குட்டிகள் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கணவரிடம் கேட்டார். அவர் நாய்களின் தொல்லை தாங்க முடியாததால் காட்டுப்பகுதியில் கொண்டு விட்டதாக கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கணவருடன் தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெருமாள் வெளியில் சென்றுவிட்டார்.
இதில் மனம் உடைந்த சாந்தி வீட்டில் இருந்த மண் எண்ணெயை ஊற்றி தனக்கு தானே தீ வைத்தார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குக்கு சேர்த்தனர்.
அவரது நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாய் பிரச்சினையில் இளம்பெண் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating