மைத்துனியை தாக்கி கொலை செய்த அத்தான்…!!
Read Time:56 Second
திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (8) மதியம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் 23 வயதுடைய கணபதிப்பிள்ளை அஜந்தினி என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அவரது சகோதரியின் கணவர் இத்தாக்குதலை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating