ஹொட்டல் அறையில் மருத்துவரின் சடலம்…!!
Read Time:1 Minute, 14 Second
கம்பஹா பொது வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த மருத்துவர் ஒருவர் ஹொட்டல் அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பஹா கிரின்விட்ட பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றையின் அறையில் இருந்து அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
ஹொட்டல் ஊழியர்கள் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
கம்பஹா, பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் வசித்து வந்த இந்த மருத்துவர் குறித்த ஹொட்டலில் நேற்றிரவு தங்கியுள்ளார்.
மருத்துவர் மதியம் வரை அறையை விட்டு வெளியில் வராத காரணத்தினால், ஹொட்டல் ஊழியர்கள் அறையை திறந்து பார்த்த போது மருத்துவர் இறந்து கிடந்துள்ளார்.
மருத்துவர் தங்கியிருந்த அறையின் கட்டில் மெத்தையில் குப்பிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating