வாகனத்தில் எமனாக வந்தவருக்கு விளக்கமறியல்…!!

Read Time:1 Minute, 57 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90திருகோணமலை- கோபாலபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ஏ.முஹீத், இன்று சனிக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், நிலாவெளி கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தர்மலிங்கம் ராஜாஎனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நிலாவெளி -கோபாலபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டிக்குப் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதினால் துவிச்சக்கர வண்டியில் சென்ற அதே இடத்தைச் சேர்ந்த நடராஜா தங்கவேல் என்பவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய இளைஞரை, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம், தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் குச்சவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கை கலப்பில் நடுவராக சென்றதால் உயிர் பறிபோன மாயம்…!!
Next post தூக்கக் கலக்கத்தால் பொலிஸ் அத்தியட்சகருக்கு வந்த வினை…!!