காலி ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு…!!
Read Time:56 Second
காலி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
காலி திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.டி.ஏ. கருணாதிலக்க சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
அடையாளம் காண்பதற்காக சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காலி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating