நேரடி நிகழ்ச்சியில் அரங்கேறிய ஜோடிகளின் சண்டை! வேடிக்கை பார்த்த போட்டியாளர்கள்…!! வீடியோ

Read Time:3 Minute, 44 Second

reality_show_002.w540தனியார் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகள் கலாசார சீரழிவுகளை எடுத்துரைக்கின்றன.

தங்கள் வியாபார நோக்கத்திற்காக தொலைக்காட்சிகள் இதனை திட்டமிட்டு செய்து வந்தாலும், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களும் தாங்கள் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக அநாகரீமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

செர்பியாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்று “தம்பதிகள்” என்ற நேரடி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது, இந்த நிகழ்ச்சியில் காதலர்கள், திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பவர்கள் தங்கள் ஜோடிகளுடன் கலந்துகொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய பங்களா ஒதுக்கப்படும், அதில் ஒவ்வொரு அறைகளிலும் கமெரா பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த போட்டியில், ஜோடியினர் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறார்களா, விட்டுக்கொடுத்து போகிறார்களா, சண்டை சச்சரவுகள் ஏதும் நிகழ்கின்றதா என்பதை கவனித்து, அவர்கள் சிறந்த தம்பதியினர்களாக தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு திருமண சடங்குகளும் நடத்தப்படும்.

இந்நிலையில், போட்டியின் நேரடி நிகழ்ச்சியின்போது, Nenad Marinkovic-Gastoz (31) என்ற நபர் பேசிக்கொண்டிருந்தபோது, இவரது காதலி Zorica Dukic(24) குறுக்கிட்டு பேசியுள்ளார், இதனால் கோபம் கொண்ட அவர் நான் பேசிக்கொண்டிருக்கும்போது நீ பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.

ஆனால், காதலி அதனை காதில் வாங்கிகொள்ளாமல் சத்தம்போடவே, பிற போட்டியாளர்களின் முன்னிலையில் அவளை வாயில் அடித்து, அருகில் உள்ள கை கழுவும் இடத்திற்கு இழுத்து செல்கிறார்.

அங்கும், நான் பேசும்போது நீ வாயை மூடு என்று காதலன் கூறுகிறார், அதற்கு காதலி உனக்கு சரியாக பேசத்தெரியவில்லை, நீ வாயை மூடு என்று கூறுகிறார், இதனைக்கேட்ட காதலர் மீண்டும் அவரை அடிக்கிறார்.

இந்த சம்பவம் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கமெராவில் பதிவாகி, நேரடியாக ஒளிபரப்பாகிகொண்டிருந்துள்ளது, இதனை வெளியில் அமர்ந்திருந்த பிற போட்டியாளர்கள் மட்டுமின்றி, மக்களும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரும் இணைபிரியாத ஜோடிகள் என்றும், இந்த நிகழ்ச்சியில் பலமுறை பங்கேற்று வெளியேற்றம் செய்யப்பட்ட இவர்கள், தங்களை சிறந்த தம்பதிகளாக நிரூபிப்பதற்கு மீண்டும் கலந்துகொண்டு இவ்வாறு நடந்துகொண்டுள்ளர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -19)
Next post நம்பகமற்ற ஆணைக்குழுவின் கடைசி மூச்சு…!!