வைத்தியர்கள் இன்மையால் அவதியுறும் மக்கள்…!!
கிரிஉல்ல மாவட்ட வைத்தியசாலையின் பணிகளில் இருந்து வைத்தியர்கள் தற்காலிகமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள வைத்தியர்கள் இருவரின் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தபட்டுள்ளதாகவும், இதன்காரணமாக குறித்த வைத்தியசாலையின் பணிகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்க வைத்தியர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அரச வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த வைத்தியசாலையின் நிர்வாக குழுவிற்கும், பிரதேசஅரசியல்வாதிகளுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினையின் காரணமே வைத்தியர்களின் வீடு தாக்கப்பட்டமைக்கான காரணம் என்று அரச வைத்தியர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன்.டி. சொய்சா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பிரதேசத்திலுள்ள வைத்தியர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்தும் வரை தற்காலிகமாக வைத்தியர்கள் கிரிஉல்ல வைத்தியசாலையின் பணிகளில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய சங்கத்தின் குருநாகல் மாவட்ட கிளை தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating