கற்பழிப்பு முயற்சியில் தப்பிக்க ஓடும் பஸ்சில் இருந்து குதித்து உயிர் பிழைத்த மாணவி: டிரைவர், கண்டக்டர் கைது…!!

Read Time:1 Minute, 57 Second

201607101154203065_girl-student-molested-attempt-driver-conductor-arrested-in_SECVPFஉத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள சிகந்தரா என்ற இடத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி விருந்தாவனத்தில் தங்கி இருக்கும் தனது பாட்டியை பார்க்கச் சென்றார்.

நேற்று முன்தினம் இரவு விருந்தாவனம் செல்லும் தனியார் பஸ்சில் சென்றார். வழியில் அனைத்து பயணிகளும் ஆங்காங்கே இறங்கி விட்டனர். கடைசியாக மாணவி மட்டும் இருந்தார்.

மாணவி தனியாக செல்வதை பார்த்த கண்டக்டர் நைசாக அவளிடம் பேச்சு கொடுத்தார். திடீர் என்று பஸ்சின் ஜன்னல் கதவுகளை மூடினார். ஆள்நடமாட்டம் இல்லாத இடம் நோக்கி சென்றது. அங்கு வைத்து கண்டக்டர் மாணவியை கற்பழிக்க முயன்றார்.

உடனே மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். பஸ்சின் ஒரு ஜன்னல் மட்டும் திறந்து இருந்தது. அதன் வழியே வெளியே குதித்து தப்பினாள். இதனால் பயந்து போன கண்டக்டரும், டிரைவரும் பஸ்சை வேகமாக ஓட்டிச்சென்று விட்டனர்.

லேசான காயங்களுடன் உயிர் தப்பிய மாணவி இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி பஸ் டிரைவர்- கண்டக்டரை நேற்று தேடிப்பிடித்து கைது செய்தனர்.

டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன் ஓடும் பஸ்சில் டிரைவர்- கிளீனரால் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது போல் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்…!!
Next post பண்டாரவளையில் தீ – கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சிக்கல்…!!