கணவனுக்காக உயிரைவிட்ட மனைவி…!!
தனது கணவனுடன் சண்டைக்கு வந்தவரிடம் இருந்து தனது கணவனை காப்பாற்ற சென்ற மனைவி, தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம்நோட்டன் லொனக் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதான எஸ்.வள்ளளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த உயிரிழந்தவரின், மகன் மற்றும் கணவன் ஆகியோர் சிகிச்சைகளுக்காக வட்டவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் தனது கணவரை சண்டையிலிருந்து விலக்க மனைவி சென்றுள்ளார்.
எனினும், தாக்குதலுக்கு இலக்காகி தலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
Average Rating