மொறட்டுவ பல்கலைக்கழக மாணவனின் இறப்பில் சந்தேகம்…!!
Read Time:1 Minute, 16 Second
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த திருகோணமலையைச் சேர்ந்த மாணவன், மொறட்டுவ – கட்டுபெத்த பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்று வந்த 22வயது நிரம்பிய குறித்த மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த மரணம் தற்கொலையா? அல்லது கொலையா என அறியும் பொருட்டு பொலிஸார் தீவிர சோதனைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாணவன் தங்கியிருந்த விடுதி அறையிலுள்ள கட்டிலில் இருந்தே சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மரண பரிசோதனைகள் இன்று நடைபெறும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating