பாதசாரி கடவையில் மாணவர்கள் மீது வாகனம் மோதி விபத்து! மூவர் படுகாயம்…!!
Read Time:1 Minute, 24 Second
தம்புள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு எதிரில் உள்ள பாதசாரி கடவையில் பயணித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கெப் ஒன்று மோதியதில் படுகாயத்திற்குள்ளாகினர்.
கெப் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து நேற்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் மற்றைய வானகன சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் காணமடைந்த மூன்று சிறுவர்களும் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீகிரியா பிரதேசத்தை சேர்ந்த 11 மற்றும் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
கெப் வாகன சாரதியை கைது செய்ததுடன் அவரை தம்புள்ள நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating