நமுனுகுல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை தீ மூட்டிய நபர் கைது…!!
Read Time:58 Second
பசறை – கனவரெல்ல நமுனுகுல மலைப்பகுதியின் துன்மலய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீ மூட்டிய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸார் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்காக குறித்த பகுதிக்குச் சென்ற போது நபரொருவர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை தீ வைப்பதை அவதானித்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை குறித்த நபரை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள நிலையில் அவரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating