தன்னுடன் ஓடிவர மறுத்ததால் கள்ளக்காதலனை சரமாரி அடித்து உதைத்த பெண்…!!
Read Time:1 Minute, 14 Second
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பத்ராவை சேர்ந்தவர் பல்ஜித் (வயது 30). தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 3 குழந்தைகளின் தாயை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்வது என்று முடிவெடுத்திருந்தனர்.
ஆனால் திடீரென மனது மாறிய பல்ஜித் அந்த பெண்ணுடன் ஓடிச்செல்ல மறுத்துவிட்டார். இதில் கோபமடைந்த அந்த பெண் பல்ஜித்தை சரமாரியாக செருப்பால் அடித்தார். மேலும் கால், கைகளாலும் அவரை அடித்து உதைத்தார்.
இத்தனை சம்பவமும் அந்த பெண்ணின் கணவர் முன்னிலையிலேயே நடந்தது. அவர் வேடிக்கை பார்த்தை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
இதுபற்றி பல்ஜித் போலீசில் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating