பேயை விரட்டுவதாக கூறி கர்ப்பிணி பெண்ணை அடித்து கொன்ற மந்திரவாதிகள்…!!

Read Time:1 Minute, 52 Second

201607131210579067_Pregnant-woman-killed-by-blows-witches-near-agra_SECVPFஉத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது சமோகார் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த 22 வயது பெண் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு ஏற்கனவே பெண் குழந்தை பிறந்திருந்தது.

எனவே அடுத்தது ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என அவரது கணவர் குடும்பத்தினர் விரும்பினார்கள். இதற்காக 2 மந்திரவாதிகளை வீட்டுக்கு அழைத்து பூஜை செய்ய சொன்னார்கள். அதன்படி மந்திரவாதிகள் வீட்டுக்கு வந்தனர்.

அவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்து விட்டு அவருக்கு பேய் பிடித்து இருக்கிறது. அதை விரட்டினால் தான் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறினார்கள். இதற்கு அங்குள்ள யமுனா நதிக்கரைக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

அதன்படி, அந்த பெண்ணை யமுனா நதிக்கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து பூஜை நடந்தது. பழுக்க காய்ச்சியை இரும்பை வைத்து அவருக்கு சூடு போட்டார்கள். பின்னர் பேயை விரட்டுவதாக கூறி சரமாரியாக அடித்தனர். இதில் மயங்கி விழுந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

உடனே மந்திரவாதிகளும், குடும்பத்தினரும் அந்த பெண்ணை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டனர். கிராம மக்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் 2 மந்திரவாதிகளையும் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒன்று, இரண்டு சொல்ல தெரியாததால் வெங்காயத்தை வாயில் திணித்து 6 வயது மகளை கொன்ற தந்தை…!!
Next post திருக்கோணேஸ்வரம் கோயிலில் நிஷா பிஸ்வால்…!!