கூட்டு பாலியல் வன்புணர்வு! இரு சந்தேகநபர்கள் கைது..!!
Read Time:1 Minute, 26 Second
அவிசாவளை, கரதன, நான்காம் தூண் பிரதேசத்தில் யுவதி ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
26 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஒருவரே கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி தனது 6 மாத குழந்தையுடன் வீட்டியில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் 5 காமுகர்களால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அவரின் கணவர் விட்டுச்சென்றுள்ள நிலையில், குறித்த பெண்ணின் சகோதரி வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார் என்றும், சம்பவ நாள் அன்று பெண்ணின் சகோதாரியும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரையில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றைய சந்தேகநபர்களை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating