பெற்ற குழந்தையை கழிவறைக் குழிக்குள் வீசிய தாய்…!!
பிறந்த குழந்தையை கொலை செய்து கழிவறைக் குழிக்குள் வீசி பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேராதனை பிரதேசத்தில் இன்று மதியம் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே 12 மற்றும் 8 வயதான இரண்டு பிள்ளைகள் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தனக்கு குழந்தை உண்டாகி இருப்பதை இந்த பெண் தன் கணவனுக்கு மட்டுமல்லாமல் குடும்ப சுகாதார தாதியிடம் மறைத்துள்ளார்.
பஸ் உரிமையாளரான இந்த பெண்ணின் கணவர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, கடந்த 11 ஆம் திகதி இந்த பெண் வீட்டில் குழந்தையை பிரசவித்து, அதனை கழிவறை குழியில் போட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனக்கு ஏற்பட்ட அதிக இரத்த போக்கு காரணமாக பெண் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாகவும் தான் அதனை கழிவறை குழியில் போட்டு விட்டதாகவும் பெண் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த பெண் தவறான உறவின் மூலம் இக்குழந்தையை பிரசவித்து அதனை கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த குழந்தையின் பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating