தலைமறைவான கொலைக் குற்றவாளி கைது…!!
Read Time:1 Minute, 5 Second
ஹிக்கடுவை பகுதியில் இடம் பெற்ற மூன்று வெவ்வேறு கொலைகளுடன் தொடர்புடைய நபர் கண்டி பல்லேகலையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த கொலையிலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்ற கொலைகளிலும் தொடர்புடைய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மீட்டியகொட பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating