இரு குழுக்கள் இடையே மோதல் : ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்..!!

Read Time:1 Minute, 47 Second

blogger-image-1391185006நுவரெலியா, ஹங்குராங்கெத்த பிரதேச பிரிவிற்குட்பட்ட லூல்கந்துர அப்பர் கோனாவ தோட்டத்தில் இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி தோட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் இரு குடும்பங்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்பு மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இரு குழுக்கள் இடையே கூரிய ஆயுதங்களால் தாக்குதலும மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த அய்யாக்கண்ணு (வயது 54) என்பவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் இருவர் ரிகில்ல கஸ்கட வைத்தியசாலையிலும் மேலும் நால்வர் கண்டி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹெங்குரங்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்கள் 100 பேர் வைத்தியசாலையில்..!!
Next post தேனீக்கள் கொட்டியதில் 45 மாணவர்கள் பாதிப்பு..!!